கொழும்பு தீ விபத்து : 6 பேரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 17 பேர் தீக்காங்களுடன் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு, புறக்கோட்டை  2வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்