
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் விழுந்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் தடை பற்றிய முறைப்பாடுகளை 1987 என்ற அவசர இலக்கத்தின் மூலமாகவோ அல்லது மின்சார சபையின் தொலைபேசி செயலி ஊடாகவோ அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.