கொழும்பில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

கொழும்பு – கொட்டாஞ்சேனை இப்பன்கேவத்த பாலத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபப் பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயோதிபப் பெண் வெள்ளை நிற கவுன் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.