கொழும்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்து சேதம்

கொழும்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்து சேதம்

கொழும்பு – தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் முச்சக்கர வண்டிகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வேனும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்திய பின்னர், முச்சக்கர வண்டிகளில் ஒன்று தீப்பிடித்து மற்ற முச்சக்கர வண்டிகளுக்கு தீ பரவியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News