கொழும்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஊதா நிற இரத்தினக் கல்

இலங்கையில் காணப்படும் உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் பெறுமதிமிக்க ஊதா நிற இரத்தினக் கல் கொழும்பில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

3,563 கரட் எடையுள்ள இந்த அரியவகை இரத்தினக் கல் 2023ஆம் ஆண்டு இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஊதா நிற இரத்தினக் கல் இது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இது இயற்கையான ஆர்னால் ரக இரத்தினக் கல் என அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரத்தினக் கல்லின் பெறுமதி 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையானது என இலங்கை இரத்தின ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைமை இரத்தினக் கல் நிபுணர் அஷான் அமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.