கொழும்பிலிருந்து மும்பைக்கு பயணித்த கப்பலில் தீப்பரவல்: நால்வர் மாயம்

கொழும்பிலிருந்து மும்பைக்கு பயணித்துக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்தகுறித்த கப்பல் விபத்திற்குள்ளான இடத்திற்கு விரைத்த இந்திய கடற்படை கப்பல்கள், தீயை அணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

12.5 மீற்றர் இழுவை கொண்ட 270 மீற்றர் நீளமுள்ள இந்தக் கப்பல் ஜூன் 7 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது.

கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.