
கைவிலங்குகளுக்குத் தட்டுப்பாடு?
நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் கைவிலங்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போதுள்ள சில கைவிலங்குகள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைவிலங்குகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாகக் கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கையில் இது தொடர்பில் தகவல் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் இது தொடர்பில் பொலிஸ் நிர்வாகப் பிரிவினரிடம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
