கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து போதைப்பொருள் மீட்பு!

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய – அத்துபோண்டே பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் அடங்கிய 100 பொதிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.