கைகள் கட்டப்பட்ட நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு

கந்தானை வெலிகம்பிட்டிய பகுதியில் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜா-எல பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் முகம் மற்றும் கழுத்து பகுதி துணியொன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் புதல்வி வழங்கிய தகவலுக்கு அமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்