
கெஹெல்பத்தரபத்மேவின் 50 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!
கெஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
