
கெப் வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய சந்தேக நபர் கைது
அநுராதபுரம் பகுதியில் கெப் வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரம் மாவட்டம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிப்பிக்குளம் சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 02 கிலோகிராம் கேரள கஞ்சா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.