
கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபருக்கு நேர்ந்த துயர்
பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்காவில் 19 வயது வாலிபர் திடீரென்று சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் வேலி மீது ஏறி அங்கிருந்த மரம் வழியாக கூண்டுக்குள் இறங்க முயற்சித்தார்.
இதை பார்த்த சிங்கம் மரத்தை நோக்கி சென்று அந்த வாலிபரை தாக்கி இழுத்து சென்றது. சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் மனநல பிரச்சினைகள் இருந்துள்ளத வாலிபர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நீண்ட காலமாக சிங்கத்தை அடக்கும் நபராக மாற விரும்பி உள்ளார்.
ஆப்பிரிக்காவுக்கு சென்று சிங்கங்களை பராமரிக்கும் பணியில் சேர வேண்டும் என்று விரும்பிய அவர் அதற்காக ஒரு முறை விமானத்தின் தரையிறங்கும் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்ய முயன்றார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த அந்நாட்டு வைத்தியர் தெரிவித்தார்.
