குளிர்காய நெருப்பு பற்ற வைத்த இளம் யுவதி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த மேரி எமில்தா விக்கிரமரட்ன (வயது 27) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி கடந்த ஜனவரி 12 ஆம் திகதி அன்று குளிர்காய்வதற்காக அடுப்பினை பற்ற வைத்துள்ளார்.

இதன்போது அவரது ஆடையில் தீப்பற்றி தீவிபத்துக்கு உள்ளாகினார்.

இந்நிலையில் அன்றையதினமே பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,  பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதன்பின்னர் 13ஆம் திகதி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.