குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் பலி
கலென்பிடுனுவெவ – உபுல்தெனிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.
உபுல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
குறித்த பெண், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், கலன்பிடுனுவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
