குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!
-பதுளை நிருபர்-
குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்
ஹப்புத்தளை தங்கமயலை தோட்டத்தை சேர்ந்த மாரிமுத்து மகேஷ்வரி ( வயது 56) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ஹப்புத்தளை தங்கமயலை தோட்டத்தில், நேற்று மாலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் குளவி தாக்குதலுக்கு இலக்கான நிலையில், ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ வைத்தியசாலையில் மாற்றப்பட்டு, அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்