குளவிக்கொட்டுக்கு இலக்காகி 42 மாணவர்கள் பாதிப்பு

ஹந்தான மலையை ஏற வந்த ஜவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மீபே பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று சனிக்கிழமை பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 42 மாணவர்களில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காயமடைந்தவர்களை சுவசர்ய அம்புலன்ஸ் வண்டிகளில் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 275 பேரும் இந்த ஹன்தானா மலையேறுவதில் கலந்து கொண்டதுடன் காயமடைந்த மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களை அவர்கள் வந்த பேருந்துகளின் மூலம் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க பொலிஸார் ஏற்பாடு செய்திருந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்