குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்ட பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர்!

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யடிநுவர, யஹலதென்ன பகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 52 வயதுடைய யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது 44 வயதுடைய மனைவி மற்றும் அவரது 17 வயதுடைய மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் இருந்தும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்