குடிநீர் 10ரூபாய் அதிக விற்பனை : 5 இலட்சம் அபராதம்

குடிநீர் 10ரூபாய் அதிக விற்பனை : 5 இலட்சம் அபராதம்

கலவானை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு, 500 மில்லி குடிநீர் பாட்டிலை ரூ. 80க்கு விற்பனை செய்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் ,கலவானை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரூ. 5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.

அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 70 விட அதிகமாக விற்பனை செய்யபட்டதை பல்பொருள் அங்கடியின் உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற அதிக விலை நிர்ணய சம்பவங்கள் குறித்து புகாரளிக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதுடன், இலங்கை முழுவதும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News