கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் செயலமர்வு

-மூதூர் நிருபர்-

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இச்செயலமர்வை, அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, புலனாய்வு அறிக்கையிடல் என்றால் என்ன?, புலனாய்வு அறிக்கையிடல் செய்வதற்கு எவ்வாறு தகவல் சேகரிப்பது?, எவ்வாறு நடு நிலையாக அறிக்கையிடல் செய்வது? உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இச் செயலமர்வில், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.