கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

இன்றும் நாளையும் (5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில்) கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் இந் நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதுடன் பட்டதாரிகளின் பட்டங்களையும் உறுதிசெய்யவுள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் (யாழ்ப்பாணம்) ஸ்ரீ சாய் முரளி இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

340 உள்வாரி, வெளிவாரி, கலாநிதி மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் 2023 ஆம் ஆண்டுக்கான பொது பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.