
கிழக்கில் முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமனம்!
-மூதூர் நிருபர்-
கிழக்கில் முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமனம்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணகசகரவினால், மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அலுவலகத்திற்குக் கிடைக்கின்ற அனைத்து எழுத்து மூலமான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்காக அந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
இதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விடயம் தொடர்பாக, இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
