கிழக்கிலங்கை தமிழ் விவாதமன்றம் பெருமையுடன் வழங்கும் “இராவணாயணம் காண்டம் 01” விவாத அரங்கு

கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் பெருமையுடன் ஏற்பாடு செய்த ‘இராவணாயணம் காண்டம் 01’ நிகழ்வு, திருகோணமலை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய கலை மற்றும் இலக்கியத்தைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், நூல் வெளியீடு, தனி நடனம், மெல்லிசை பாடல், வில்லுப்பாட்டு குறும்பட வெளியீடு உள்ளிட்ட பலதரப்பட்ட கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேறி பார்வையாளர்களைக் கவர்ந்தன.

இந்த முக்கிய நிகழ்வுக்கு திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்,தொழிலதிபர் க.பாஸ்கரன்,திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராஜா,சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ.கஜமுகன் ஆகியோர் இதில் பங்கேற்று, ‘இராவணாயணம் காண்டம் 01’ நிகழ்வின் வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தமிழரின் கலை, இலக்கியம் மற்றும் விவாதத் திறனை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.