கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அசெளகரியம்

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் மருந்துகளை பெறமுடியாமல் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களால் இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாதாந்த சிகிச்சை பெற வருகை தந்த நோயாளிகள் சிகிச்சைகளின் பின்னர் மருந்துகளை பெறமுடியாமல் சிரமத்திற்குள்ளாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24