கிளிநொச்சி பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் சிரமத்தில்!

மாகாண சுகாதார சேவை பணிப்பாளரின் வடமாகாணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தாதியர்களால் மேற்கொள்ளப்படும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குருதி மாதிரிகளை பெறுதல், ஊசி போடுதல் உள்ளிட்ட தாதியர்களினால் வழங்கும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , நோயாளர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது