கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் பாடசாலை மாணவரை ஏற்றிக்கொண்டு டிப்போ சந்தி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் அதே திசையில் பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.45. மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த பாடசாலை மாணவர் காயத்துடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகன சாரதி தப்பி செல்ல முற்பட்ட வேளையில் வீதியால் சென்ற பொதுமக்கள் டிப்பர் சாரதியை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்









