
கிளிநொச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளை இனம்காண நவீன இயந்திரம்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சியில் போக்குவரத்து விதி முறைகளை மீறும் சாரதிகளை அடையாளம் காண பொலிஸார் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து விதி முறைகளை மீறி வேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை நவீன வேகம் கணிக்கும் இயந்திரம் மூலம் இனங்கண்டு அவர்களுக்கெதிராக தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையிலேயே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இன்று புதன் கிழமை வேகமாக வாகனம் செலுத்திய பல சாரதிகள் தண்டப்பணம் செலுத்த வேண்டி ஏற்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்