கிளிநொச்சியில் பெண் கொலை
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சியில் வயோதிப பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் இன்று திங்கட்கிழமை மாலை கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் – விஜயரத்தினம் சரஸ்வதி (வயது-68) பெண்னே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.