
கிளிநொச்சியில் அரச கால்நடை சேவைகள் பாதிப்பு
-கிளிநொச்சி நிருபர்-
கால்நடை வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த அடையாள வேலைநிறுத்தத்தின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி இகண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி, கண்டாவளை நான்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை வைத்தியர்கள் சமூகம் அளிக்காமையால் கால் நடை வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கால்நடை மருத்துவர்களுக்கான தனி சேவையொன்றை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சியைத் தடுக்கும் வகையில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் டாக்டர் உப்புல் ரஞ்சித் குமார கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார்.
Beta feature