
குடிநீரை பெற்று கொள்வதற்கான ஒப்புதல் கடிதம் கையளிப்பு
கிளிநொச்சிக்கான குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்கான ஒப்புதல் கடிதம் கையளிக்கப்பட்டது.
இரணைமடுக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்கான குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்காகவே மூன்று அடையாளம் காட்டப்பட்ட இடங்களிலிருந்து நீரைப்பெறுவதற்கு, ஒப்புதல் கடிதம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகளால் மாவட்ட அரசாங்கதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, குடிநீர் தேவையைப்பூர்த்தி செய்வதற்கு கிளிநொச்சி குளத்திலிருந்து நீரைப்பெற்று சுத்திகரித்து மக்களுக்கு வழங்குகின்றது.
மேலும், குளத்தின் நீரின் தரம் மழை காலங்களில் குறைவாக காணப்படுகின்ற நிலையில், இரணைமடுக்குளத்திலிருந்து நீரைப்பெற்றுக்கொள்வதற்கு இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன அமைப்புக்களுடனும் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்களுடன் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதேவேளை, கிளிநொச்சி குளத்தின் வான் பாய்கின்ற பகுதி, கோவிந்தன் கடை சந்தி, தற்போது திருவையாறு ஏற்ற நீர்ப்பாசனம் இயங்கி வருகின்ற பகுதி என மூன்று இடங்களை அடையாளங்காட்டி அதற்கான ஒப்புதலை மாவட்ட அரசாங்கதிபரிடம் மகஜராக கையளித்தனர்.



