கின்னஸ் சாதனை படைத்த அரிசி

உல​கிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசி ஜப்​பானில் விளைவிக்​கப்​படுகிறது.

இதன்படி, இந்த அரிசி விலை கிலோ ஒன்றின் விலை 12,500 ரூபாயாக உள்​ளது.

அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த புதியவகை அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கின்மேமை பிரீமியம் என அழைக்கப்படும் இந்த அரிசிதான் உலகில் மிகவும் விலையுயர்ந்த அரிசியாக உள்ளது.

அரிசி உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், கின்மேமை பிரீமியம் அரிசி 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் 840 கிராம் அரிசி 5490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அப்போது இந்த அரிசி, உல​கிலேயே அதிக விலையுள்ள அரிசி என கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தது.

இந்தநிலையில், குறித்த அரிசி மேம்படுத்தப்பட்டு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.