கிண்ணியாவில் கண்டல் காட்டுப் பகுதிக்குள் காணாமல் போன பெண் மீட்பு!
-கிண்ணியா நிருபர்-
கிண்ணியாவில் நேற்று திங்கட்கிழமை காலை கண்டல் காட்டுப் பகுதிக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போன பெண் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினரால் தேடப்பட்ட அந்த பெண், இன்று காலை முத்துநகர் பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழிகள் மாறிப்போனதால், அந்தப் பெண் வழி தவறி கண்டல் காடுகளுக்குள் நுழைந்திருக்கலாம் , குறித்த பகுதியில் சிறிய அளவில் களஞ்சல் நீரும், சிக்கலான மண் வழிகளும் இருப்பதால், வெளியேறும் வழியை அடையாளம் காண முடியாமல் தவித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது அவர் வீட்டில் நலமாக இருப்பதுடன், இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக செயல்படுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.