கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!
எல்பிட்டியில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வெய்ஹேன மத்தக பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கடந்த 7 ஆம் திகதி எல்பிட்டி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக எல்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்