
கார் விபத்தில் தப்பிய 6 பேர் லொறி மோதி உயிரிழப்பு!
இந்தியா – மராட்டிய மாநிலம் பீட்ஸ் மாவட்டத்திலுள்ள துலே – சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கெவ்ராய் நகரில் சொகுசு கார் ஒன்று வீதி தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த 6 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
அதனை தொடர்ந்து, விபத்துக்குள்ளான காரில் இருந்த 6 பேரும் கீழே இறங்கி, வீதி தடுப்பில் ஏறி நின்ற காரை அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லொறி, அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் 6 பேரும் உயிரிழந்தனர்.
கார் விபத்தில் இருந்து தப்பியவர்கள் மீது லொறி மோதி, 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.