கார் மோதியதில் பெண்னொருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நல்லூர்ப பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்தித்துறை வீதியும் செம்மணி வீதியும் இணைகின்ற சந்தியில் இன்று திங்கட்கிழமை காலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் தரித்து நின்றிருந்த கார் திடீரென திருப்ப முற்பட்ட போது வீதியால் துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த பெண் மீது மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார் மோதியதில் பெண்னொருவர் படுகாயம் கார் மோதியதில் பெண்னொருவர் படுகாயம்

கார் மோதியதில் பெண்னொருவர் படுகாயம்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்