
கார்த்திகை தீப திருவிழாவை கொண்டாடிய அம்பாறை மாவட்ட மக்கள்
-அம்பாறை நிருபர்-
கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி கோலாகலமாக கொண்டாடினர்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, சம்மாந்துறை, பெரியநீலாவணை இகல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, வீரமுனை, நாவிதன்வெளி அன்னமலை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று, திருக்கோவில், கோளாவில், ஆலையடிவேம்பு, பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம் நடைபெற்ற நிலையில் ஏனைய தெய்வ ஆலயங்களில் சொர்க்கப்பானை எரித்து கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




