காரைதீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவரை இன்று புதன்கிழமை மாலை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவரும், சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து 510 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றவரிடம் இருந்து 770 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்களை காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.