காத்தான்குடி அல் ஹிரா பாடசாலைக்கு அலி சாகிர் மௌலானா நிதி ஒதுக்கீடு

முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா கடந்த ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி , ஏறாவூர் , கல்குடா பகுதிகளில் அவசியமான பல அபிவிருத்தி வேலைகளை அடையாளம் கண்டு தனக்கு கிடைக்கப்பெற்ற விசேட அபிவிருத்தி நிதியின் மூலம் அதற்கான ஒதுக்கீடுகளை செய்து இருந்தார்கள்.
அந்த வகையில் காத்தான்குடி பிரதேசத்தில் கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்காக மாத்திரம் பல மில்லியன் ரூபாய்களை பகிர்ந்து வழங்கி இருந்தார்.
அதன் ஒரு அங்கமாக காத்தான்குடி அல் ஹிரா வித்தியாலய நிருவாகம் அலி சாகிர் மௌலானாவிடம் வகுப்பறை  கட்டட தேவை குறித்து தெரியப்படுத்திய போது தனது விசேட அபிவிருத்தி நிதி மூலம் 50 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து இருந்தார்கள் .
அதற்கான நிதி கிடைக்கப்பெற்று உள்ளதால்   கட்டட நிருமாண வேலைகளை நேற்று புதன்கிழமை முன்னாள் அமைச்சர் அலி சாகிர் மௌலானா  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்