காதலர் தினம் பிறந்த கதை

உலகமெங்கும் இன்று புதன் கிழமை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

சாதி, மதம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, காதலின் நெகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்தும் நாளான இன்றைய காதலர் தினம் பிறந்த கதை பற்றி எம்மில் பலர் அறிந்து இருக்கமாட்டார்கள்

ரோமானியப் பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகின்றன.

ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக காணப்பட்டது.

எனவே, அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் ஒருவர் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அரசனின் உத்தரவை மீறி ஆண்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததை அறிந்த கிளாடியுஸ் பெப்ரவரி 14 ஆம் திகதி வேலண்டைன் எனும் பாதிரியாருக்கு மரண தண்டனையை விதித்தார்.

அவரது நினைவாக ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகின்றன.இது பொதுவான விடயமாக இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான வரலாறுகளுடன் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் உலகில் வாழும் அத்தனை மக்களாலும் கொண்டாடப்படுகிறது.