காணாமல் போன யுவதியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!
மாவனெல்ல பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 21 வயது யுவதியை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்
குறித்த யுவதி கடந்த ஜூலை மாதம் முதல் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுவதியின் தந்தை மாவனெல்ல பொலிஸில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து யுவதி காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன யுவதியை பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071- 8591418 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.