காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் ஸ்ரீதரன்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலையில் உள்ள சல்லி பகுதியில் உள்ள கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர் குறித்த வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.
கடந்த 20 ஆம் திகதி சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .
வட்டாரம் 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 )இமுருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் எஸ்.ஸ்ரீதரன் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடியதுடன், இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்