காட்மோர் வீதியில் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்
-மஸ்கெலியா நிருபர்-
இந் நிகழ்வு நேற்று வியாழக்கிழமைநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிட்ணண் கலைச் செல்வி ஆரம்பித்து வைத்தார்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமி மலை மல்லிப்பூ சந்தியில் இருந்து காட்மோர் செல்லும் மதிய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான வீதி மொக்கா கருமாரியம்மன் ஆலய பகுதியில் இருந்து சுமார் 1.25 கிலோமீட்டர் பகுதி காபட் செய்யும் பணி இன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிட்ணண் கலைச் செல்வி ஆரம்பித்து வைத்தார் இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மற்றும் மொக்கா காட்மோர் தோட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேலை திட்டம் நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற் கொள்ளும் எனவும் எஞ்சிய பகுதியை இரண்டாம் கட்டமாக காபட் செய்ய படும் என பாராளுமன்ற உறுப்பினர் கிட்னண் கலைச்செல்வி தெரிவித்தார்.




