
கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மீனவர்தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் உடன் புனரமைத்து தமது பாவனைக்குத் தருமாறு மீனவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்ட மீனவர் தங்குவதற்குரிய கட்டமும், எரிபொருள் நிரப்பு நிலையமும் இற்றைவரையில் கவனிப்பாரற்று அங்கிருந்த பொருட்களும், உதிரிப்பாகங்களும் காணாமல்போன நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
20 மில்லியன் ரூபா பெறுமதியில் இந்த அபிவிருத்தித்திட்டம் அப்போது முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனவே மக்களின் சொத்துக்கள் இனிமேலும் கள்வர்களால் சூறையாடப்படுவதற்கு அனுமதிக்காமல் அங்குள்ள மீனவர் தங்குமிடத்தையும், எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு விடவேண்டும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்