களனிவெளி மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

நாரஹேன்பிட்டி மற்றும் கோட்டே ரயில் மார்க்கத்தில் மரம் முறிந்து வீழ்ந்த நிலையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.களனிவெளி மார்க்கத்திலான ரயில் சேவைகளே பாதிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்க் கொண்டு, மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து ரயில்களையும் கொழும்பு கோட்டை – நானுஓயா மற்றும் நானுஓயா – கொழும்பு கோட்டை வரை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இன்று (27) காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் பொடி மெனிகே (காலை 5.55), உடரட மெனிகே (காலை 8.30) மற்றும் காலை 9.45 மணிக்கு பயணிக்கும் ரயில்கள் நானுஓயா ரயில் நிலையம் வரை மாத்திரமே பயணிக்கும்.

இதேநேரம் கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் கண்டி ஒடிஸி (காலை 9.40) ரயில் நானுஓயா வரையே பயணிக்கும்.

இதற்கு மேலதிகமாக உடரட மெனிகே (காலை 9.20), கண்டி ஒடிஸி (காலை 11.00), பொடி மெனிகே (பகல் 12.15) மற்றும் பிற்பகல் 2.16 மணிக்கான ரயில்கள் நானுஓயாவிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும்.

சீரற்ற வானிலை குறைவடையும் வரை ரயில்கள் நானுஓயா மாத்திரமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .