களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நெதலகமுவே தம்மதின்ன தேரர் கைது

களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வண.நெதலகமுவே தம்மதின்ன தேரர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டிற்கு தீவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேரரிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.