கல்முனையில் வாள்வெட்டு இரு பெண்கள் உட்பட இருவர் படுகாயம்
-கல்முனை நிருபர் பாறுக் ஷிஹான்-
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்று வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று இரவு 11.45மணியளவில் இடம்பெற்றதுடன் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட இரண்டு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை பொலிசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இத்தாக்குதலின் பின்னணி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.