
கல்கிசை துப்பாக்கிச்சூட்டின் துப்பாக்கிதாரி கைது
கொழும்பு – கல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, கல்கிசையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளது.
28 வயதான இலங்கை விமானப்படை முன்னாள் சிப்பாயான சந்தேக நபர், கொட்டாவையில் உள்ள விஹார மாவத்தையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 9 மிமீ வெடிமருந்துகளின் 15 சுற்றுகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் எண் தகடுகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.
மே 5 ஆம் திகதி தெஹிவளையைச் சேர்ந்த 19 வயது இளைஞன் மீது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டி குறித்த இளைஞன் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்றும், கடவதாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் குற்றத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை பிரதேச எஸ்.எஸ்.பி பிரசன்ன பிரம்மனகேவின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக 48 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.