கருவா பயிரிடப்பட்ட காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்

ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் அதுபோதே பகுதியில் கருவா பயிரிடப்பட்டிருந்த காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 110 கிலோ 460 கிராம் ஹெரோயின் அடங்கிய 100 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்தில் போதைப்பொருள் அடங்கிய பொதிகளை மறைத்து வைத்த சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.