கனடாவில் கத்திகுத்து தாக்குதல்: தாயும் பிள்ளை உயிரிழப்பு

கனடாவில் கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகி தாய் மற்றும் பிள்ளை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எட்மோன்டன் நகரில் க்ரோவ்வேட் பிலேயின்ஸ் பாடசாலைக்கு அருகாமையில் 11 வயது பிள்ளை மற்றும் 35 வயதான தாய் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கும் தாக்குதல்தாரிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்