கனடாவிலிருந்து யாழ் வந்த யுவதி புற்றுநோயால் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-
கனடாவில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவர் சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

வடமராட்சி – கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை கல்லுவத்தில் உள்ள அன்னாரின் பூர்வீக வீட்டில் இடம்பெறவுள்ளது.

குறித்த சிறுமியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.