கந்தளாய்க்கு நீர் வழங்கல் அமைச்சர் விஜயம்

-மூதூர் நிருபர்-

​நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், டொக்டர் சுசில் ரணசிங்க, கந்தளாய் நகரில் நிலவும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகப் பரிசீலிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கந்தளாய் நீர் வழங்கல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

​அமைச்சர் தனது விஜயத்தின்போது, நீர் வழங்கல் திணைக்களத்துக்கு சொந்தமான பல கட்டிடங்களையும் வசதிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார்.

சேவைத் தடங்கல்கள், பராமரிப்பு பிரச்சனைகள் மற்றும் உடனடித் தீர்வு காணப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

​இதன்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, கந்தளாய் பிரதேச சபை தலைவர், மற்றும் பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.